Chitrakani Vs The District Collector and Others
நன்கொடை ஆவணத்திலோ அல்லது செட்டில்மென்ட் ஆவணத்திலோ பராமரிக்க வேண்டும் என்பது உட்பட எந்த நிபந்தனைகளும் இல்லாத போது அதனை முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வருவாய் கோட்டாட்சியர் ரத்து செய்ய முடியாது.
அதேபோல் சம்மந்தப்பட்ட முதியவர் தன்னை பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தான் செட்டில்மென்ட் எழுதிக் கொடுத்தேன் என்று வாதிடாத நிலையில் அந்த செட்டில்மென்ட் ஆவணத்தை கோட்டாட்சியர் ரத்து செய்ய முடியாது.
மூத்த குடிமகன் ஒருவர்
எழுதிக்கொடுக்கும் செட்டில்மென்ட் ஆவணத்தில் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்து, அந்த நிபந்தனை மீறப்பட்டால் மட்டுமே அந்த ஆவணத்தை ரத்து செய்ய கோட்டாட்சியருக்கு அதிகாரம் உண்டு.
இதுகுறித்து ஏற்கனவே மாண்புமிகு உச்சநீதிமன்றம் " சுதேஷ் சிகாரா Vs ராம்தி தேவி (2022 - SC - ONLINE - 1684)" என்ற வழக்கில் தெளிவாக விவாதித்துள்ளது.
முதியோர் பாதுகாப்பு சட்டம் மனித நடத்தை சம்மந்தப்பட்டது. இந்த சட்டத்தை மூத்த குடிமக்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் இடையேயான உறவை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னும், பின்னும் உள்ள நடத்தையை கவனத்தில் கொள்ள வேண்டும். இயந்திரத்தனமாக நிபந்தனை இல்லாத செட்டில்மென்ட் அல்லது கொடை ஆவணத்தை கோட்டாட்சியர் ரத்து செய்யக்கூடாது என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 Comments