செட்டில்மெண்ட்

 *முதியோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்யும் பொழுது எழுதி வைக்கும் பொழுது அவர்களுக்கு 60 வயது கடந்து இருக்க வேண்டுமா?*


*கதை சுருக்கம்:*

தந்தையானவர் தனக்கு பாத்தியப்பட்ட சொத்தினை தனது மகளுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் எழுதி வைத்துள்ள சூழ்நிலையில் அதனை தனது மகள் தன்னை பராமரிக்கவில்லை என்று 2012 ஆம் ஆண்டு தன்னிச்சையாக ரத்து செய்து பத்திரம் பதிவு செய்துள்ள நிலையில் மேற்படி ரத்து ஆவணத்தின் நிலைதன்மை குறித்து மகளால் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்படுகிறது இந்த சூழ்நிலையில் தந்தை முதியோர் மற்றும் பெற்றோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் எழுதி வைத்த செட்டில்மெண்ட் ஆவணம் செல்லாது என்று உத்தரவிடக்கோரி சட்டப்பிரிவு 23 கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதனை எதிர்த்தும் மகள் நீதிப்பேராணை மனுவினை தாக்கல் செய்துள்ளார். இதன் இடையில் தந்தை மேற்படி சொத்தினை விற்பனை செய்வதற்காக மூன்றாம் நபருக்கு ஒப்பந்தம் போடப்பட்டு அதன் அடிப்படையில் அவர் செயல்முறை படுத்தவில்லை என்று நீதிமன்றத்தில் குறித்த வகை பரிகாரம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் ஒரு தலைபட்ச உத்தரவானது மூன்றாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் அதனையும் இந்த நீதிப்பேராணை மனுவினில் அதன் நிலை தன்மை குறித்தும் வினவியுள்ளார்.


*வழக்கு விபரம்:*

மகளால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு நீதிப்பேராணை மனுவினையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த சூழ்நிலையில் அதனை எதிர்த்து மகளால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் *தேவி -எதிர்- பதிவுத்துறை தலைவர் மற்றும் மூன்று நபர்கள்* என்ற வழக்கினில் தந்தை மகளுக்கு செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த பொழுது அவருடைய வயதானது 58 வயது மட்டுமே உள்ளது என்றும் முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் சட்டப்பிரிவு 23 பயன்படுத்த வேண்டும் என்றால் எழுதிக் கொடுக்கப்பட்ட தேதி அன்று அவருக்கு 60 வயது இருக்க வேண்டும் என்றும் அதனால் மேற்படி சட்ட பிரிவினை தந்தையால் பயன்படுத்த இயலாது என்றும் மேலும் தந்தையானவர் தன்னிச்சையாக செட்டில்மெண்ட் ஆவணத்தை ரத்து செய்ய இயலாது என்றும் அதனால் அவர் 2012 ஆம் ஆண்டு ரத்து செய்த  செட்டில்மெண்ட் ஆவணமானது செல்லத்தக்கதல்ல என்றும், மேலும் முதியோர் பாதுகாப்பு சட்டம் சட்ட பிரிவு 23 பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதனை அனைத்து சார்பதிவாளர்களுக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த வழக்கினில் தந்தை மற்றும் தாயாருக்கு மாதம் ரூ.30000/- மகள் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் உயிரோடு இருக்கும் வரை மேற்படி இடத்தினை அவர்கள் அனுபவித்து வரலாம் என்றும் அதுவரை மகளுக்கு  அதை விற்க எந்த  அனுமதியும் இல்லை என்றும் விற்பனை செய்ய வேண்டும் என்றால் முறையாக நீதிமன்றத்திடம் முன் அனுமதி பெற்றே விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


*சென்னை உயர்நீதிமன்றம்*


W.A. No. 374 & 376 /2020


*Devi -Vs- inspector general of registration and 3 others*


Dt. 6.11.2023

#seniorcitizenact #seniorcitizen #cancellationofsettlementdeed #section23 #madrashighcourt #LisMemeReporter #tamillegalmeme #tamillawmeme #judgement #lawyers #tamilmemes #advocate #lawmemes #buddinglawyers

Post a Comment

0 Comments